;
Athirady Tamil News

மருத்துவமனையில் இருந்து வைத்திய நிபுணரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

0

அநுராதபுரம்(anuradhapura) போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மயிலுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு
வைத்தியசாலைக்கு வந்த வைத்தியர் தனது மோட்டார் சைக்கிளை வைத்தியசாலையின் உணவகத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு அவர் பணிபுரியும் சத்திரசிகிச்சை பிரிவுக்கு சென்று சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.