;
Athirady Tamil News

ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு: ஈரான் தலைவரின் அதிரடி அறிவிப்பு

0

ஹிஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் (Masoud Peseshkian) உறுதியளித்துள்ளார்.

ஈரானின் (iran) அரசு ஊடகமொன்றிற்கு இஸ்ரேல் (israel)– காசா போர் குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு, ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு அதிபர் உறுதியளித்துள்ளார்.

ஈரானின் அடிப்படை கொள்கை
இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள அட்டூளியங்களை நிறுத்த ஹிஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் ஈரானின் புதிய அதிபர் மசூத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.