;
Athirady Tamil News

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் (G.C.E O/L) மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்று (09) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு
இந்தநிலையில், பரீட்சைகள் திணைக்களத்தை உள்ளடக்கிய உப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கட்டணம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.