;
Athirady Tamil News

யாழ்.காக்கைதீவு மீன் சந்தையில் மீட்கப்பட்ட பழுதடைந்த மீன்களை அழிக்க உத்தரவு

0

யாழ்ப்பாணம் காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சந்தைக்கு சென்று திடீர் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்தார்.

அதன் போது , விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த, மீன்கள் மற்றும் இறால்கள் ஒரு தொகையை மீட்டிருந்தார்.

அவற்றை நீதிமன்றில் சான்று பொருட்களாக பரப்படுத்தி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் , பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்களை அழிக்குமாறும் உத்தரவிட்ட மன்று , வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதிக்கு திகதியிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.