;
Athirady Tamil News

யாழில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மூன்று படகுகளில்அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 13 தமிழக கடற்தொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களையும் , அவர்களின் படகுகளையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், கடற்தொழிலாளர்களை யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.