;
Athirady Tamil News

திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

0

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர்களை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனமே இவ்வாறு பாரஊர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகள்
இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.