;
Athirady Tamil News

யாழில். மூதாட்டி வழுக்கி விழுந்து உயிரிழப்பு

0

மலசல கூடத்திற்கு சென்ற வேளை வழுக்கி விழுந்த மூதாட்டி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் , வடமராட்சி , புலோலி தெற்கை சேர்ந்த இராசம்மா சின்னத்தம்பி (வயது 82) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 07ஆம் திகதி தனது வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்றவேளை வழுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளார். அதனை அடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.