;
Athirady Tamil News

மலையகத்தில் பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமார் (A. Aravinda Kumar) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெறப்பட்டுள்ள தரவு
அத்தோடு, தற்போது வரை பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் 1,700 பட்டதாரிகள் மலையகத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தொடர்ந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.