;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 12.07.2024

0

யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (12.07.2024) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் முன்னேற்ற நிலைமைகள் குறித்து கௌரவ பிரதம மந்திரி அவர்களினால் பரிசீலிக்கப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அடை காக்கும் கருவி (Incubator) வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி என்பன பிரதம மந்திரி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.