;
Athirady Tamil News

யாழில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்த ஹரீன் பெர்னான்டோ

0

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுக்கும் (Harin Fernando) இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(Vijayakala Maheswaran) ஏற்பாட்டில் நேற்றைய தினம் (12) யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

வேலைத் திட்டங்கள்

இதன்போது, தற்போதுள்ள அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்ததோடு எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் யாழ் மாவட்டம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் தொகுதி அமைப்பாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.