;
Athirady Tamil News

வெறும் இலையில் இத்தனை நன்மைகளா! இப்படி பயன்படுத்தி பாருங்கள்..

0

கோடை காலம் என்றவுடன் பல பேருக்கு மாம்பழங்கள் ஞாபகத்திற்கு வரும்.

மாங்காய்,மாம்பழம் என்பன எவ்வளவு முக்கியமானதோ தன் இலைகளும் நன்மை பயக்கும்.

மாவிலையில் உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் காணப்படுகின்றன.

பல நோய்களுக்கான மருந்து
மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து அதனுடன் தேன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

மாவிலைகள் வயிற்றுப் புண்களுக்கான சிகிச்சையில் ஒரு சஞ்சீவியாக விளங்குவதோடு இது வயிற்றுப் புண்களின் சிகிச்சையில் பெரிதும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மா இலைகளின் நீரை உட்கொள்ளலாம். இரத்த நாளங்களை வலுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் மா இலைகளை வேகவைத்து அருந்துவது மிகுந்த நிவாரணம் தரும்.

அவற்றில் அந்தோசயனிடின் என்ற டானின் உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மாவிலைகள்
மாவிலைகளை வேகவைத்து குடிப்பது ஆஸ்துமா அல்லது சுவாச நோய்களிலும் நன்மை பயக்கும். இது இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனையில் நிவாரணம் அளிக்கும்.

மா இலையை கஷாயம் செய்து குடிப்பது நன்மை பயக்கும். மா இலைகளில் புற்று நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மூல காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். மா இலைகள் முடி பிரச்சனைகளை குணப்படுத்தும்.

இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்க உதவும். மேலும், அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.