;
Athirady Tamil News

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவுகளுக்கு நிமல் லான்சா மற்றும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்த அனைத்து குழுக்களைளும் ஜனாதிபதி தற்போதும் தன்வசம் வைத்துள்ளார்.

ரணில் ஆதரவு குழு
இந்தநிலையில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற ரோஹித அபேகுணவர்தனவின் பேரணியில் ஜனாதிபதி கலந்துகொண்டமைக்கு நிமல் லான்சா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ராஜபக்ச குடும்பத்தின் முன்னணி குழுவுடன் ஜனாதிபதியின் வலுவான பிணைப்பு அந்த பேரணியில் லன்சா அணியை மிஞ்சும் நிலையை எட்டியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அணி அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதில் சிக்கல் எழுந்துள்ளதால், இருப்பு குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.