;
Athirady Tamil News

யாழில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி : மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

0

யாழ்ப்பாணம் (Jaffna0 நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று (13) மதியம் 01.10 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது.

நெல்லியடி பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கர வண்டிக்கு பெற்றோல் நிரப்பப்பட்டு சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாகவே முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது.

மேலதிக விசாரணை
முச்சக்கரவண்டியின் பெற்றோல் நிரப்பு கலன் ஊடான ஒழுக்கினால் தீடிரென தீப்பற்றி இருக்கலாம்.என தெரிய வருகின்றது.

இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணையினை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.