;
Athirady Tamil News

கதிர்காமத்தில் தொடரும் திருட்டுச்சம்பவங்கள்: அச்சத்தில் பக்தர்கள்

0

கதிர்காம (Karagama) உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களிலிருந்து எரிபொருள் திருடப்படுவதால் அங்கு வருகை தரும் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் கையடக்கத் தொலைபேசிகள், முச்சக்கரவண்டிகளின் மின்கலம் உட்பட உதிரிப்பாகங்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் பல பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

விசேட நடவடிக்கை
இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக மாணவியொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்று நேற்று (12) திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.