;
Athirady Tamil News

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்

0

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பிலான நிலைமைகளை நேற்றையதினம்(13) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நிலவிய விவகாரம் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அதன் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற அனைத்து தரப்பினரினதும் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

அதன் ஓர் அங்கமாக வைத்திய அதிகாரிகள் மற்றும் சாவகச்சேரி பிரதேச சமூக ஆர்வலர்களை தனது யாழ்ப்பாண அலுவலகத்திற்கு அழைத்து எடுக்க வேண்டுய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.