;
Athirady Tamil News

அம்பாறையில் இறந்து கரையொதுங்கியுள்ள முதலைகள்: பொதுமக்கள் விசனம்

0

மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் முதலைகள் பல இறந்து கரையொதுங்கியுள்ளன.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் அருகிலெயே இவ்வாறு பல முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

30ற்கும் அதிகமான முதலைகள்
மேலும் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30ற்கும் அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 7 அடி முதல் 8 மற்றும் 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பாலத்தை சுற்றி சட்டவிரோதமாக குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.