;
Athirady Tamil News

அமெரிக்காவில் 2 புதிய நகரங்களில் இந்திய விசா விண்ணப்ப மையங்கள் திறப்பு

0

அமெரிக்காவில் இரண்டு நகரங்களில் புதிய விசா விண்ணப்ப மையங்களை இந்தியா திறந்துள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) மற்றும் பெல்லூ (Bellevue) நகரங்களில் புதிதாக இந்திய விசா விண்ணப்ப மையங்கள் (IVAC) திறக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களை, சியாட்டில் மேயர் புரூஸ் ஹாரெல் (Bruce Harrell) மற்றும் சியாட்டிலில் உள்ள இந்திய தூதர் பிரகாஷ் குப்தா (Prakash Gupta) ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய ஹாரெல், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த இந்தியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று பாராட்டினார்.

புதிய IVAC-களைத் திறப்பதன் மூலம் பசிபிக் வடமேற்கு மாநிலங்களுடனான உறவை வளர்ப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது என்று பிரகாஷ் குப்தா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.