;
Athirady Tamil News

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

மேல் மாகாணத்தில் (Western Province) இன்று (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இரண்டாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் (Colombo) நேற்று  (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

புதிய கட்டணம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீற்றருக்கு அதிகபட்சமாக 100 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றருக்கு 90 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும்.

இரவு 10 மணிக்கு முதல் காலை 05 மணி வரை இந்தத் தொகையுடன் 15% அதிகமாக சேர்க்கப்படும்.

அந்த கட்டணத்தை மீற்றரில் கணக்கிடுவதில் சிரமங்கள் இருப்பினும், ஏதேனும் அநியாயம் நடந்தால், சரியான தகவல்களுடன் காவல்துறைக்கும், பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் (Consumer Affairs Authority) பயணிகள் தகவல் தெரிவிக்கலாம்.

எனவே இந்த தொழிலில் ஈடுபடுவோர் நேர்மையுடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மக்களுக்கு முச்சக்கரவண்டி தேவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அது டைனோசர் போல் அழிந்து போவதைத் தடுக்க முடியாது” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.