;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது

0

தென்மேற்கு இங்கிலாந்தில் (England) இருவரை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை பயணப்பைகளுக்குள் வைத்து, பாலம் ஒன்றின் அருகில் வைத்ததாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான அவர், 61 மற்றும் 71 வயதான இருவரை கொலை செய்து அவர்களின் உடல்களின் துண்டுகளை, இரண்டு பயணப்பைகளுக்குள் பொதியிட்டு பின்னர் பாலம் ஒன்றின் அருகில் அவற்றை விட்டுச்சென்றுள்ளார்.

குறித்த சந்தேக நபர் , கொலை செய்யப்பட்டவர்களுடன் முன்னர் ஒன்றாக வாழ்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பாகங்கள்
நகரின் தொங்கு பாலத்தின் அருகில் இரண்டு பயணப்பைகளில் இந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (15) லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளபார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள குறித்த இருவரின் வீட்டில் மேலும் சில உடல் எச்சங்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.