;
Athirady Tamil News

மகிந்தவை பாராட்டிய அனுரகுமார : நாமல் வெளியிட்ட தகவல்

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை (mahinda rajapaksa)அண்மையில் நாடாளுமன்றத்தில் பாராட்டியதாகக் கூறிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa), கொள்கை விடயங்களைத் தவிர தமக்கு எவருடனும் தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனுரகுமாரவும் நாங்களும் எதிரிகள்
தங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அனுரகுமாரவும் நாங்களும் எதிரிகள் என நீங்கள் அனைவரும் நம்பியிருந்தீர்கள்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவை அனுரகுமார பாராட்டினார்.

தனிப்பட்ட முரண்பாடுகள்
எனவே கொள்கை விடயங்கள் தவிர எமக்கு தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை என்ன விடயத்திற்காக அனுரகுமார பாராட்டு தெரிவித்தார் என்பதை நாமல் ராஜபக்ச தெரிவிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.