;
Athirady Tamil News

வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

0

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும், மேம்படுத்தப்பட வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன். சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும் வைத்தியர்.அசேல குணவர்த்தன மற்றும் வைத்தியர்கள், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.