;
Athirady Tamil News

யாழ்.போதனாவுக்கு 35 மில்லியன் பெறுமதியான கருவள ஸ்கானர் அன்பளிப்பு

0

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுமார் 35 மில்லியன் பெறுமதியான கருவள சிகிச்சைக்கான ஸ்கானர் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

இக்கருவி இன்று மாலை 3.00மணிக்கு கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

லண்டன் அபயம் அறக்கட்டளையிடம் ஆறு திருமுருகன் விடுத்த வேண்டுதலால் இக்கருவி கிடைத்துள்ளது. இக்கருவிக்கான முழுச்செலவையும் சதா.மங்களேஸ்வரன் சகோதரர்கள்
அபயம் ஊடாக வழங்கியுள்ளனர்.

மங்களேஸ்வரன் யாழ் இந்துக் கல்லூரியில் ஆறு.திருமுருகன் அவர்களோடு கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.