;
Athirady Tamil News

இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த டுபாய் இளவரசி

0

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகப் பதிவு
குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.

நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவானது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.