;
Athirady Tamil News

சட்டவிரோத பதாதைகள்: வாட்ஸ் ஆப்பில் புகாா் தெரிவிக்கலாம்

0

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட சட்டவிரோத பதாதைகள், விளம்பரப் பலகைகள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ் ஆப்பில் புகாா் தெரிவிக்கலாம் என புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வடக்கு உள்கோட்ட நடுவா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாவட்டத்தில் சாலைகள் மற்றும் நடைப்பாதைகளில் சட்டவிரோதப் பதாதைகள், விளம்பர பலகைகள் மற்றும் கட்டவுட்டுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டவிரோத, அனுமதியில்லாத பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் 9443383418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் தெரவிக்கலாம். பதாகை படத்தில் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.