;
Athirady Tamil News

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

0

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் விதம் தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

குழுவின் அறிக்கை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

வாகனங்களை எப்படி இறக்குமதி செய்வது என்பது குறித்த ஆயத்தத்திற்கு தயாராக உள்ளோம் அத்தோடு இது தொடர்பான குழுவின் அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.