;
Athirady Tamil News

மின் கட்டணம்-சமையல் எரிவாயு விலை குறைப்பில் மோசடி: நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு

0

நாடளாவிய ரீதியில் மின் கட்டணம், மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை குறைத்துள்ளமையானது, நுகர்வோரைச் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரி.ஐ உடுவர தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளுக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைப்பு
இதேவேளை, நாட்டில் இன்று (19) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, உளுந்து, பால்மா, கோதுமைமா, வெள்ளை பச்சை அரிசி, வெள்ளை சீனி, கீரி சம்பா ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.