;
Athirady Tamil News

கடல் மீன்களின் விலைகள் வீழ்ச்சி

0

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான மீன்களான வளையா சூரை கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மருதமுனை மற்றும் கல்முனை சாய்ந்தமருது பகுதிகளில் கீரி இன மீன்கள் இன்று அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த கீரி மீன்களின் பெறுமதி 1 கிலோ சுமார் 300முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

தற்போது மருதமுனை கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான சிறிய பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை சாய்ந்தமருது பிரதேச கடற்கரையோரங்களில் கெலவல்லா (Kelawalla) , வலயா (Balaya) போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதுடன் ஆர்வத்துடன் பொதுமக்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வலயா(Balaya) ஒரு கிலோ 400 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையும் கெலவல்லா (Kelawalla) ஒரு கிலோ 1,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்பவர்கள் இவ்வாறான மீன்களை எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.