;
Athirady Tamil News

பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்: மேக்ரான் ஆதரவாளர் சபாநாயகராக தேர்வு

0

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் அலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசியலில் குழப்பமான நிலை நீடித்துவருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேக்ரான் ஆதரவாளரான ஒருவரையே சபாநாயகராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைப் பொருத்தவரையில், சபாநாயகரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, பிரதமர் தேர்வில் அவர் முக்கியப் பங்காற்றுவார்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், நேற்று பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி சபாநாயகரைத் தேர்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தினார்கள். மூன்று சுற்றுகளாக நேர்மையாக நடந்த வாக்கெடுப்பின் முடிவில், மேக்ரான் ஆதரவாளரான Yaël Braun-Pivet என்பவரே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஆட்சியிலும் அவர்தான் சபாநாயகராக பதவி வகித்தார்.

தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான André Chassaigne 207 வாக்குகள் பெற்ற நிலையில், Braun-Pivet 220 வாக்குகள் பெற்று சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள Braun-Pivetக்கு பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், அவரது தேர்வு, பன்முக உணர்வுகளின் வெளிப்பாட்டை உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.