;
Athirady Tamil News

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவுள்ள தற்போதைய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் அவர்களின் தேர்தல் தொடர்பான நிலைப்பாடானது தற்போது வெளிப்படையான அரசியல் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடைமுறையானது ராஜபக்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பிளவை விரிவுபடுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் 22ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை வெளியிட்டதன் பின்னர் அரசியல் அரங்கில் பெரும் கேள்வி நிலைகள் தோன்றியுள்ளன.

அரசியல் பின்னணி
இதன் பின்னணியிலேயே இவ்வாறான எச்சரிக்கையை அரசியல் ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

ரணிலின் இந்த நடவடிக்கையானது அவரது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படலாம் என ஒரு சாராரின் கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது.

மேலும், ராஜபக்சர்களின் அரசியல் அபிலாஷைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், சர்ச்சைக்குரிய மற்றும் கணிக்க முடியாத தேர்தல் நகர்வுக்கு களம் அமைக்கும் எனவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.