;
Athirady Tamil News

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகில் பற்றியது தீ : பலர் கருகி மாண்டனர்

0

வடக்கு ஹைட்டியில் புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவுகளுக்கு படகு ஒன்று கடந்த புதன்கிழமை புறப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறியதாக ஐ.நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தீ விபத்திற்கான காரணம்
எஞ்சியிருந்த 41 புலம்பெயர்ந்தோர் ஹைட்டியின் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 புலம்பெயர்ந்தோர் தீக்காயங்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடித் தகவல் எதுவும் இல்லை.

வறுமையில் வாடும் கரீபியன் நாட்டிலிருந்து இடம்பெயர்வது பல மாதங்களாக அதிகரித்து வருகிறது, ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது பரந்த நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தும் குற்றவாளி கும்பல்களின் வன்முறையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள்.

ஹைட்டியின் சமூகப் பொருளாதார நிலைமை
“ஹைட்டியின் சமூகப் பொருளாதார நிலைமை வேதனையில் உள்ளது” என்று அந்நாட்டில் உள்ள ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM)இன் தலைமை அதிகாரி கிரிகோயர் குட்ஸ்டீன் (Gregoire Goodstein) கூறினார்.

“கடந்த மாதங்களில் ஏற்பட்ட தீவிர வன்முறை ஹைட்டியர்களை இன்னும் அவநம்பிக்கையான நடவடிக்கைகளை நாடியுள்ளது.”என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.