;
Athirady Tamil News

மைக்ரோ சொப்ட் முடக்கம்: மிகப்பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க நிறுவனம்

0

புதிய இணைப்பு
மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட் ஸ்ரைக்’ Crowdstrike என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று மைக்ரோசொப்ட் சர்வர்கள் முற்றாக முடங்கின.

இதனால் தொலைத்தொடர்பு சேவை, போக்குவரத்து சேவைகள், பங்குச் சந்தை மற்றும் வங்கிகள் என்பன பாதிப்படைந்து வழமைக்கு திரும்பின.

இந்நிலையில், மைக்ரோசொப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ளதுடன் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில் சரிந்துள்ளன.

இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனத்திற்கு 9 பில்லியன் டொலர் சந்தை மூல தனத்தை இழந்துள்ளது.

முதல் இணைப்பு
உலகளவில் மைக்ரோ சொப்ட் (Microsoft) நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலக அளவில் வங்கி சேவைகள் மற்றும் விமானங்களை தரையிறங்குவது விமானங்களின் செக்-இன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை (silanka), இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட பெரும்பாலான நாட்டில் வசித்து வருபவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.

கணினி திரை நீல நிறம்

உலகம் முழுவதும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள்தான் உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோ சொப்ட் விண்டோஸ் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திடீரென்று பல்வேறு பயனர்களின் கணினி திரை நீல நிறமாக மாறி, ரீ-ஸ்டார்ட் ஆகி வருகிறது. இப்படியான சிக்கலுக்கு ப்ளூ ஸ்க்ரீன் ஆப் டெத் என்று பெயர்.

மேலும் மைக்ரோ சொப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர்
இந்த பாதிப்புகெல்லாம் காரணம் Crowdstrike அப்டேட் தான் எனக் கூறப்படுகிறது. CrowdStrike என்பது அமெரிக்காவில் உள்ள சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் மைக்ரோ சொப்ட் நிறுவனம் மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் CrowdStrike மென்பொருளின் அப்டேட்தான் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பாதிப்புக்கு காரணம் என டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம் கூறுகிறது.

CrowdStrike இன் ஃபால்கன் சென்சார் செயலிழந்து விண்டோஸ் சிஸ்டத்துடன் முரண்பட்டதால் தரமற்ற அப்டேட் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல்
இதனை ஒப்புக்கொண்ட நிறுவனம் இந்தச் சிக்கலைத் தீர்க்க எங்கள் பொறியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றும், இதற்காக யாரும் சப்போர்ட் டிக்கெட்டை அணுக வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

மேலும் பிரச்சினை சரிசெய்யப்பட்டதும் பயனர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த பிரச்சினைக்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.