;
Athirady Tamil News

கனடாவில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்: மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

0

கனடாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான கொலையாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
கனடாவின் செயின்ட் ஜான்ஸில்(St. John’s) 33 வயதான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் Springdale Street அருகே உள்ள Water Street-ல் கண்டெடுக்கப்பட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் சில நாட்களுக்கு முன்னதாக இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரான பெண்ணின் 34 வயது கணவர், ஒருநாள் முன்னதாக அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கை சந்தேகத்திற்கிடமான மரணமாக ராயல் நியூபவுண்ட்லாந்து காவலர் (Royal Newfoundland Constabulary) அறிவித்துள்ளனர்.

ஈரானிய தம்பதி
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும், சந்தேக நபரான அவரது கணவரும் ஈரானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான கணவர் கல்வி நோக்கத்திற்காக சிறிது காலமாக கனடாவின் Newfoundland-ல் இருந்தார் எனவும், மே மாதத்தின் நடுப்பகுதியில் அவரது மனைவி கனடாவிற்கு வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில். ஜூலை 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை LeMarchant சாலை, Water Street மற்றும் Springdale Streetஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கும் தகவல் மற்றும் காணொளி காட்சிகளை RNC தேடி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.