;
Athirady Tamil News

முன்பின் தெரியாத பெண்ணுடன் டேட்டிங் சென்ற சுவிஸ் நாட்டவருக்கு கிடைத்த அதிர்ச்சி

0

முன்பின் தெரியாத பெண்ணுடன் டேட்டிங் சென்ற சுவிஸ் நாட்டவர் ஒருவர் திடீரென தாக்குதலுக்குள்ளானதால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

டேட்டிங் சென்ற நபருக்கு கிடைத்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்திலுள்ள Winterthur நகரில் வாழ்ந்துவரும் 23 வயது நபர் ஒருவர் முன்பின் தெரியாத ஒரு பெண்ணைச் சந்திப்பதற்காக பூங்கா ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு அந்த பெண் இல்லை. மாறாக, ஒரு கூட்டம் இளைஞர்கள் அவர் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தான் அந்தப் பெண்ணுடன் snapchatஇல் பழகியதாக தெரிவிக்கும் அவர், அந்தப் பெண் டேட்டிங்குக்கு சம்மதித்ததாகவும், இருவரும் பூங்கா ஒன்றில் சந்திக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் அந்த பூங்காவுக்குச் சென்று அந்தப் பெண்ணுக்காக காத்திருக்கும்போது, திடீரென அங்கு வந்த ஒரு இளைஞர்கள் கூட்டம் கட்டைகளால் அவரைத் தாக்கியதுடன் அவர் மீது பெப்பர் ஸ்பிரேயும் அடித்திருக்கிறார்கள்.

யார் அந்தப் பெண், வேண்டுமென்றே அந்த இளைஞரை அவர் சிக்கவைத்தாரா, அந்த இளைஞர்களுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.