;
Athirady Tamil News

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

0

மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதில், எதிர்வரும் திறைசேரி உண்டியல் ஏலம் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் அங்கு ஏலம் விடப்பட உள்ளது.

ஏல விற்பனை
இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 182 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 364 நாட்களில் 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் அங்கு ஏலம் விடப்படும்.

இதேவேளை, 110,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், கடந்த 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.