;
Athirady Tamil News

கேரளத்தில் 14 வயது சிறுவனுக்கு நிஃபா தொற்று

0

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் நிஃபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை புணேயில் உள்ள ஆய்வு மையம் உறுதிசெய்தது. இதையடுத்து, கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட உள்ளாா்.

அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

தொற்றின் மையப்பகுதியாக கருதப்படும் பாண்டிக்காடு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்றாா்.

முன்னதாக, சிறுவனுக்கு நிஃபா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் ரத்த மாதிரிகள் மத்திய ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

அதைத்தொடா்ந்து, வீணா ஜாா்ஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலா், தேசிய சுகாதார திட்ட மாநில இயக்குநா், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கோழிக்கோடு மாவட்டத்தில் 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளிலும் எா்ணாகுளம் மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டிலும் நிஃபா வைரஸ் பரவியது. அதேபோல் வயநாடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் வௌவால்களில் நிஃபா தொற்று கண்டறியப்பட்டன.

இதையடுத்து, இத்தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அண்மையில் கேரள அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.