;
Athirady Tamil News

நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா விடுத்துள்ள எச்சரிக்கை

0

சுகாதார அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வோம் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்திய நிர்வாகிகள் குறித்து சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல், 25ஆம் திகதி காலை நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இது மக்கள் போராட்டமாக மாறும். இது வரலாறாக மாறும். மேலும், இந்த போராட்டத்தில் தன்னையே அர்ப்பணித்து ஆகுதியாக மாறவும் தயார்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.