;
Athirady Tamil News

குழந்தைகள் இருந்த காரை குறிவைத்து தீ வைத்த 19 வயது பெண்: பிரித்தானியாவில் பரபரப்பு

0

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் காருக்கு தீ வைத்த சம்பவத்தில் 19 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பெண் ஒருவர் காருக்கு வேண்டுமென்றே தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு 10:52 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் தனது குழந்தைகள் காரில் இருந்த போது, அதில் பெண் ஒருவர் தீ வைத்து தாக்குதல் நடத்தியதாக குழந்தைகளின் தாய் புகார் அளித்துள்ளார்.

இந்த தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

அத்துடன் தாயாரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், தீ வைப்பு சந்தேகத்தின் பேரில் 19 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.