;
Athirady Tamil News

பிரித்தானியாவில் கொடூர சம்பவம்… பிள்ளைகள் இருவருடன் வேண்டுமென்றே கொளுத்தப்பட்ட கார்

0

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, பிள்ளைகள் இருவருடன் வேண்டுமென்றே கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் நெருப்பு வைக்கப்பட்டதாக புகார்
லீட்ஸ் பகுதியில், ஜூலை 18ம் திகதி இரவு சுமார் 10.52 மணியளவில் பொலிசாரை தொடர்புகொண்ட பெண் ஒருவர், தமது கார் நெருப்பு வைக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கும் ஏற்கனவே லீட்ஸ் பகுதியில் நடக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை என்றே கூறப்படுகிறது.

பொலிசார் முன்னெடுத்த விசாரணை மற்றும் துரித நடவடிக்கை காரணமாக 19 வயது பெண் ஒருவர் கைதாகியுள்ளார். விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதான பெண்
இதனிடையே, புகார் அளித்துள்ள பெண் மற்றும் அண்டை வீட்டாரும் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து பிள்ளைகளை பத்திரமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களால் சோதனை செய்யப்பட்டு, பாதிப்பில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதான பெண் தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விசாரணை நடந்து வருவதாக மேற்கு யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.