;
Athirady Tamil News

லண்டனில் 15 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் கைது

0

மேற்கு லண்டன் பகுதியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் பரபரப்பு
லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove ஞாயிற்றுக்கிழமை மாலை 7:20 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அவசர ஊழியர்கள் மற்றும் வான் ஆம்புலன்ஸ் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைத்த போதிலும், சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கொலை வழக்காக கருதி லண்டன் காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

6 பேர் கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகளில் தற்போது காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.