;
Athirady Tamil News

ரயில்வே ஊழியருக்கு கரண்ட் பில் மட்டுமே ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி

0

ரயில்வேயில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு மின்கட்டண பில் ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மின்கட்டண பில்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் சர்மா. இவர், இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 18 -ம் திகதி அன்று காலை 11.30 மணிக்கு உத்தரபிரதேச மாநில மின்வாரியத்தில் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் அவருக்கு மின்கட்டண பில் தொகை ரூ.4,02,31,842 என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை பார்த்ததும் ரயில்வே ஊழியர் வசந்த் சர்மா அதிர்ச்சி அடைந்துள்ளார். இவருக்கு வழக்கமாகவே மாதந்தோறும் மின்கட்டண பில் தொகை ரூ.1,490 என்று வருவதால் அதை மட்டுமே செலுத்தி வருவார்.

இந்த சம்பவம் குறித்து மின் வாரிய செயல் பொறியாளர் சிவா திரிபாதி கூறுகையில், “மின்கட்டண பில் தொகை கணினி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல் என்பதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.