;
Athirady Tamil News

கரவெட்டியில் 13 பேர் கைது

0

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது நீதிமன்றங்களால் திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.