;
Athirady Tamil News

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க தயாராகும் ஐரோப்பிய நாடு

0

போலந்தில் இலங்கையர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த வேலைவாய்ப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் இது தொடர்பில் தனது “எக்ஸ்” கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

விசா வசதி
விசா வசதி இந்தநிலையில், இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பில் போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.