;
Athirady Tamil News

பாடல் கேட்ட சிறுவனுக்கு மரணதண்டனை: இணையத்தில் வெளியாகும் போலித்தகவல்

0

ஈரான் (Iran) தொழுகை நேரத்தில் பாடல் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மையை ஆராய்ந்ததில், இது கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த செய்தி என்றும், ஈரான் நாட்டிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள மொசூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 2014 முதல் 2016 வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

மரண தண்டனை
அப்போது, அங்குள்ள Nabi Younis சந்தை பகுதியில் கடை நடத்திய ஒருவரின் மகன் (Ayham Hussein) சிடி பிளேயரில் பாப் இசை கேட்டுள்ளார்.

இதனால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பொது மக்கள் முன்பாக, அந்த 15 வயது சிறுவனின் தலையை வெட்டி, மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

எனவே, 2016ம் ஆண்டு ஈராக் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் நிகழ்த்திய கொலைக் குற்றம் தொடர்பான புகைப்படம் ஒன்றை எடுத்து, தற்போது ஈரானில் நடக்கும் அட்டூழியம் என்று கூறி வதந்தி பரப்பப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.