;
Athirady Tamil News

ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

0

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ் நகரப் பகுதி, மத்திய பேருந்து நிலையம் மற்றும் பிரதான வீதியோரங்களில் இன்றைய தினம் (24) குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் போராட்ட இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட குறித்த சுவரொட்டியில் “ரணிலை விரட்டுவோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள்
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் ரணிலுக்கு எதிராக இவ்வாறான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் போராட்ட முன்னணியின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் நேற்று (23) யாழ் மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

அத்துடன், சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.