;
Athirady Tamil News

திருமணமானவுடன் பெண்ணை பார்த்து மாப்பிள்ளை சொன்ன வார்த்தை.. 3 நிமிடங்களில் விவாகரத்து

0

பொதுவாக திருமணம் என்பது சிலருக்கு சொர்க்கமாகவும், இன்னும் சிலருக்கு நரகமாகவும் இருக்கும்.

பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சில ஆண்டுகளில் சண்டையிட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கி பிரிகிறார்கள்.

இதன்படி, சமீப காலமாக விவகாரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் துபாயில் திருமணமான தம்பதிகள் இருவர் விவாகரத்து பெற்ற சம்பவம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.

3 நிமிடத்தில் விவாகரத்து
அப்படி என்ன அவர்களின் விவாகரத்தில் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஒரு துபாய் உள்ள ஒரு தம்பதியினர் தங்களது உறவினர்களை அழைத்து மிக பிரமாண்டமாக திருமணம் செய்துள்ளனர்.

திருமணம் முடிந்தவுடன் தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த சமயத்தில் மணமகள் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

விழுந்த பெண்ணை பார்த்து மணமகன் சொன்ன வார்த்தை அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அதாவது தன்னுடைய மனைவியை பார்த்து, ”முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா” என கோபத்துடன் கேட்டிருக்கிறார்.

மாப்பிள்ளை இப்படி பேசியதை கேட்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் நண்பர், உறவினர்கள் முன்னாள் திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து நீதிபதியை அழைத்து, “உடனே விவாகரத்து வேண்டும்..” என கேட்டுள்ளார்.

திருமணமாகி வெறும் 3 நிமிடத்தில் இத்தம்பதிகள் விவாகரத்து பெற்றது துபாய் வரலாற்றில் மிகக்குறைந்த நேரத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.