;
Athirady Tamil News

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலக கும்பல்கள்: மாத்தறையில் தென்பட்ட சுவரொட்டிகள்

0

மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான பாதுகாப்பு சுவரில் பல இடங்களில் பாதாள உலக கும்பல்கள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு தனிநபரின் அல்லது திட்டமிட்ட கும்பலின் செயலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (25) காலை அந்தந்த சுவர்களில் இந்த சுவரொட்டிகள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
அதில் ஒரு சுவரொட்டியில் “பாதாளம் வெல்லும், சட்டத்தரணிகள் பாதாள உலக ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள், மாத்தறை நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது.

மற்றைய சுவரொட்டியில், பாதாள உலகம் வெற்றி கொள்கிறது – அப்பாவிகளுக்கு யார் உதவுகிறார்கள்?” என எழுதபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த சுவரொட்டிகள் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படாத இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், புலனாய்வு குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் மாத்தறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.