;
Athirady Tamil News

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனகூறி இளைஞன் செய்த மோசம்

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞளே இவ்வாரு கைதாகியுள்ளார்.

மிரட்டி 3 இலட்சம் ரூபா கப்பம்
தன்னை பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திய சந்தேக நபர், நபர் ஒருவரை மிரட்டி 3 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுள்ளார்.

பணத்தினை கொடுத்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று புதன்கிழமை (24) பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.