;
Athirady Tamil News

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு

0

புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் (25) வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

இந்தியாவிலுள்ள காசி திருத்தலத்திலிருந்து கலாநிதி சிதம்பரமோகனால் புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

பங்கேற்றோர்

இதன் பின்னர், சங்கானை பிரதேச செயலர் தலைமையில், இந்து – பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது.

இதன்போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதியில் சிரமதானமும் செய்யப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.