;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா

0

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தாம் களமிறங்கப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) கணக்கில் பதிவிட்டுள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு அழைப்பு
அத்துடன், இலங்கையை முன்னேற்றுவதற்கு அவருடன் இணையுமாறு ஒவ்வொரு இலங்கையருக்கும் சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, 2010 ஆம் ஆண்டு ஜெனரல் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.