;
Athirady Tamil News

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

0

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா (Vavuniya) எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தின் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் பிராந்திய அலுவலகம் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சேவைகள்
அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்தத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.